child

child

Thursday, March 28, 2013

பிரிவுக்குப் பின்

நீ நடந்த
சாலையில்,
நான் தவறவிட்ட
புன்னகையை,
சேகரிக்கிறேன்...
உன் பிரிவுக்குப் பின்...


- கவிதைகளின் நாயகன் (M.Rajasekaran)



Photo: நீ நடந்த
சாலையில்,
நான் தவறவிட்ட
புன்னகையை,
சேகரிக்கிறேன்...
உன் பிரிவுக்குப் பின்...

குழந்தைக் கவிதை

குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள்,
பொம்மைகளின் கூட்டத்தில்,
மிகவும் பிடித்த,
பொம்மையாக நாமும் இருக்கலாம்...!!!

- கவிதைகளின் நாயகன் (M.Rajasekaran)


Photo: குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள்,
பொம்மைகளின் கூட்டத்தில்,
மிகவும் பிடித்த,
பொம்மையாக நாமும் இருக்கலாம்...!!!

- கவிதைகளின் காதலன் (ம.ராஜசேகரன்) (https://www.facebook.com/KavithaikalinKathalan)

முகமூடி

முகமூடி
================
எங்கிருந்து கழட்டி வீசப்பட்டதோ,
தெரியவில்லை..
எனக்கு சரியாக இருக்கிறது..!!
இருந்தும்..!
எனக்கான ஒன்றைத் 
தேடித் தேடியே களைத்துப்போகிறேன்...
என்னுடையதை தொலைத்துவிட்டு...!!

- கவிதைகளின் நாயகன் (M.Rajasekaran)



Photo: முகமூடி
================
எங்கிருந்து கழட்டி வீசப்பட்டதோ,
தெரியவில்லை..
எனக்கு சரியாக இருக்கிறது..!!
இருந்தும்..!
எனக்கான ஒன்றைத் 
தேடித் தேடியே களைத்துப்போகிறேன்...
என்னுடையதை தொலைத்துவிட்டு...!!

நினைவுகள்

எத்தனை முறை,
உதறித் தள்ளினாலும்,
மீண்டும், மீண்டும்,
கரம் பிடிக்கும்,
குழந்தையைப் போல,
உன் நினைவுகள்...!!!

- கவிதைகளின் நாயகன் (M.Rajasekaran)


Photo: எத்தனை முறை,
உதறித் தள்ளினாலும்,
மீண்டும், மீண்டும்,
கரம் பிடிக்கும்,
குழந்தையைப் போல,
உன் நினைவுகள்...!!!

குழந்தைக் கவிதை


"யானை எப்படிமா விழுந்துச்சு ??" என்ற கேள்விக்கு,
"யானை டம்முன்னு விழுந்துச்சு.." என்று
சொல்லி சிரிக்கும் குழந்தைக்காகவே,
யானை இன்னும்,
பலமுறை விழுந்திருக்கலாம்
என்று தோன்றுகிறது...!!!

Photo: "யானை எப்படிமா விழுந்துச்சு ??" என்ற கேள்விக்கு,
"யானை டம்முன்னு விழுந்துச்சு.." என்று
சொல்லி சிரிக்கும் குழந்தைக்காகவே,
யானை இன்னும்,
பலமுறை விழுந்திருக்கலாம்
என்று தோன்றுகிறது...!!!

நிகழவில்லை

கண்ணே நீ ஒவ்வொருமுறை தொடும்போதும்,
என்னுள்...
ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கவில்லை..!
ஆயிரம் வீணைகள் வாசிக்கப்படவில்லை..!
கடல் அலைகள் ஆா்ப்பரிக்கவில்லை..!
புயல் தென்றலாய் மாறவில்லை..!
இன்னும்... இன்னும்...
எந்தவொரு அதிசயமும் நிகழவில்லை..!!
நீ எப்போது மீண்டும் தொடுவாய் என்ற நினைப்பைத் தவிர...!!!

Photo: கண்ணே நீ ஒவ்வொருமுறை தொடும்போதும்,
என்னுள்...
ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கவில்லை..!
ஆயிரம் வீணைகள் வாசிக்கப்படவில்லை..!
கடல் அலைகள் ஆா்ப்பரிக்கவில்லை..!
புயல் தென்றலாய் மாறவில்லை..!
இன்னும்... இன்னும்...
எந்தவொரு அதிசயமும் நிகழவில்லை..!!
நீ எப்போது மீண்டும் தொடுவாய் என்ற நினைப்பைத் தவிர...!!!

குதூகலிப்பு

பலூன் விற்பவரைக் கண்ட,
குழந்தையைப் போல,
உனைக் கண்டதும்,
குதூகலிக்கிறது,
என் மனது...!!

----> ம.ராஜசேகரன்


Photo: பலூன் விற்பவரைக் கண்ட,
குழந்தையைப் போல,
உனைக் கண்டதும்,
குதூகலிக்கிறது,
என் மனது...!!

----> ம.ராஜசேகரன்

Saturday, March 23, 2013

கிராமத்து பெண் கவிதை...?!

கிராமத்து பெண் கவிதை...?!
-------------------------------------
ஊரடங்குற வேளையில,
உன் ஆசை அடங்கலையே..!

பேரெடுத்த மச்சான் முன்ன..
சீரெடுத்து வச்சேன் கண்ணு..!

கட்டிக்காத்த என் மனச,
தட்டிப்பறிச்சு போறதென்ன சொல்லு...!

விட்டுவிட்டு விழுந்த மனசு,
சிட்டுக்குருவி ஆனதென்ன சொல்லு..!

பொழுது சாயுற வேளையில நெஞ்சு,
பழுது பார்க்க வார மச்சான்..!
விழுது போல வளா்ந்த ஆசைய,
தொழுது போக தொடங்கி வச்சான்..!!!

Friday, March 22, 2013

முட்கள்

ரோஜாக்கள் விற்கும்,
சிறுமிகளுக்கு,
முட்கள் குத்துவதில்லை...!
முட்களிடையே தான்...!
ரோஜாக்கள் குத்துகின்றன...!!!