child

child

Wednesday, August 28, 2013

முத்த யட்சன்..!


வாழை இலையில்,
சரியும்,
மழைத் துளிகளென,
விழுந்து உடையும்,
வியா்வைப் பொட்டுகள்..

கிடார் கலைஞனின்,
அதிர்வற்ற,
இசை நரம்பென,
இதயத் துடிப்பு..

வளை கையில்,
வலக்கரம் கோர்க்க,
இடி, மின்னலுக்கு,
பயந்து ஒளியும்,
குழந்தையென,
வெட்கம்..

சிலிர்ப்பின் அர்த்தத்தை,
உணா்ந்தபடி,
முழுநிலவை,
மூடிமறைக்கும்,
மேகமென கேசம்..

சரியாக வாசிக்கப்படா,
புல்லாங்குழலின்
நாதமென,
உதடு துடிப்பு..

இதோ..

இதோ..

இந்த,
கீழ்வானச் சிகப்பை,
உணா்த்தும் இதழ்களில்
உட்காரத் துடித்தபடி,
இரைந்து, கரைந்துக்கொண்டிருந்தது,
இதழ் தின்னும் பறவையொன்று...!!!

 ராஜசேகரன் 

5 comments:

  1. Replies
    1. நன்றி சகோ... தங்கள் வரவு மிக்க மகிழ்ச்சி :-)

      Delete
  2. அருமையான வரிகள் ......

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - ஏழாம் நாள்

    ReplyDelete