child

child

Monday, August 19, 2013

வெட்கம் ?

வெட்கம் ?
************

உந்தன் விரல் தொடும் சாக்கில்
லேசாக கரம் நுழைப்பேனே
உடனே சட்டென்று பின்னுக்கு 
இழுத்து 
உதடு சுழித்து புன்னகை சிந்துவாயே
அதுவா ?

யாருமற்ற வேலைகளில்
உன் இடை தொடும் வளையலில்
என் விரல் படும் சமயம்
உனைமறந்து
என் கரத்தினையும் சேர்த்து
முகம் மறைப்பாயே
அதுவா ?

மழைக்கு முன்பு வரும்
மண்வாசனை போல
உனை சீண்டும் சமயம்
கன்னம் இரண்டும்
சிவப்பு பூசுமே
அதுவா ?

இதில் எதுவாயினும்
அது
அது தான்

ஒளிபுகா மொட்டுக்குள்ளே
உட்புகும் மழைநீரைப்போல
உன்னிலிருந்தே
உருவாகும்
அது
வெட்கமே தான் !


----> கவிதைகளின் நாயகன்  (ம.ராஜசேகரன்)


No comments:

Post a Comment